Editorial / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) மாலை ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக வைத்து இடம்பெற்றுள்ளது.
பிரதான வீதியில் பயணித்த இரு ஓட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது .
இந்த விபத்தில் ஓட்டோவில் பயணம் செய்த மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025