2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கல்முனையில் பாரிசவாத சிகிச்சைநிலையம் திறப்பு

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 24 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் பாரிசவாத சிகிச்சை நிலையமொன்று கடந்த 19 ஆம் திகதி சுகாதாரஅமைச்சின் செயலாளர் டாக்டர் எச்.எம்.முனசிங்க  மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதாரஅமைச்சின் மேலதிகசெயலாளர் டாக்டத் லால் பனாப்பிட்டிய, திட்டமிடல் பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் சதாசிவம் சிறிதரன், மருத்துவசேவைகள் பிரதிசுகதாதாரசேவைப்பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுதத் தர்மரெட்ண ,கட்டடங்கள் பிரதிசுகாதாரசேவைப்பணிப்பாளர் நாயகம்  எந்திரி திசேரபெரேரா மற்றும் கிழக்குமாகாண சுகாதாரஅமைச்'சின் செயலாளர் எ.எம்.அன்சார், கிழக்குமாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் எ.ஆ.எம்.தௌபீக், கல்முகைப்பிராந்தியசுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X