Janu / 2023 ஜூலை 06 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் பிரதேச செயலக சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 06 வீடுகளுக்கான (750,000/= பெறுமதியான 03 வீடு, 250,000/= பெறுமதியான 03 வீடு) அடிக்கல் நடும் ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை (05) நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலிலும், சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் அவர்களின் தலைமையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.
நூருல் ஹுதா உமர்



14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026