Gopikrishna Kanagalingam / 2017 மே 21 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல், மல்வப்பிற்றிய பகுதியிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலை, இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக, தனது டுவிற்றர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், "வழிபடும் இடம் மீதான எந்தத் தாக்குதலும், கண்டிக்கத்தக்கது. இந்தத் தாக்குதல், ஒரு வாரத்துக்குள் மூன்றாவது ஆகும். இதை மேற்கொண்டவர்களை அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களென நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago