2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

’சர்வதேச ஆய்வுக் கப்பல்களுக்கு தடையில்லை’

Freelancer   / 2024 ஜூலை 07 , மு.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் அடுத்த ஆண்டில் இருந்து சர்வதேச ஆய்வுக் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீன ஆய்வுக் கப்பல் நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படாமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதனிடையே, சோனார் தொழிநுட்பத்துடனான கப்பலொன்றை இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில் வெளியுறவு அமைச்சர் ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .