2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு - ரயில் சேவைகள் ரத்து

Freelancer   / 2024 ஜூலை 09 , பி.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்கு செல்லும் இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள், திருகோணமலை மற்றும் அங்கிருந்து மட்டக்களப்பில் இருந்து ரம்புக்கனைக்கு செல்லும் இரவு அஞ்சல் புகையிரதம் உட்பட பல ரயில்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட 14 பிரச்சினைகளை முன்வைத்து நிலைய அதிபர் சங்கம் இன்று பிற்பகல் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தன.

மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயக்கப்படவிருந்த அனைத்து புகையிரதங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .