George / 2017 மே 26 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுரலிய மாவத்தகம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 வீடுகள் புதையுண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் இன்னும் பலரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் கர்ப்பிணி தாய் மற்றும் சிறு குழந்தையும் உள்ளடங்குவதாகவும் இந்த வீடுகளில் 12க்கும் அதிக மக்கள் வசித்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .