A.P.Mathan / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோடை வெயிலோடு பேச்சாளர்களின் கொப்பளிக்கும் உரைகளும் சேர்ந்து தமிழக தேர்தல் களத்தை உஷ்ணமாக்கியிருக்கிறது. முக்கியக் கட்சிகளான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் பிரச்சார ஹீரோக்கள் வாக்காளர்கள் மனதில் தங்கள் கட்சியின் செயற்றிட்டங்களை அறிவித்து விட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அவர்களின் செயற்றிட்டங்களை அறிவித்து "நாங்கள்தான் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று' என்று கச்சை கட்டி நிற்கிறார்கள். அ.தி.மு.க.விற்கு முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தை வழிநடத்துகிறார். தி.மு.க.விற்கு கலைஞர் கருணாநிதி வழி நடத்தினாலும், உள்ளபடி களத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் (அதாவது நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள்) சுற்றுப்பயணம் செய்து சுறுசுறுப்பாக தேர்தல் பிரசார நாயகனாக நிற்பவர் ஸ்டாலின்தான். "ஊழல் செய்து, காங்கிரஸுக்கு உறுதுணையாக இருந்த கட்சி தி.மு.க.' என்று அக்கட்சியை சாடுகிறார் ஜெயலலிதா. அதே நேரத்தில், "வளர்ச்சித் திட்டங்களை முடக்குவார். மத்தியில் நிலையான ஆட்சிக்கு ஆதரவு தரமாட்டார்' என்று ஜெயலலிதாவைச் சாடுகிறார் ஸ்டாலின்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .