A.P.Mathan / 2012 ஜூன் 25 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருகின்ற 30ஆம் திகதி குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் பிறந்த மண்ணுக்குச் சென்று விட்டு தமிழகம் வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தி.மு.க. தலைமை ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்கு முன்பு பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக முன்மொழிந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்ட போட்டோவும் அக்கட்சியின் அதிகார பூர்வமான பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலுவும் ஏ.கே.எஸ்.விஜயனும் பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலை நோக்கி தி.மு.க. இப்படி விறுவிறுப்பான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், மாநிலத்தில் அ.தி.மு.க. அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் என்றும் திடீரென்று அறிவித்துள்ளது.14 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago