Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Simrith / 2025 ஜூன் 01 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிலிருந்து திரும்பிய அகதி ஒருவர் பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதுள்ள சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் பல்தரப்பட்ட விமர்சனங்களைத் தூண்டியதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த நடவடிக்கையானது நாடு திரும்பப் பதிவு செய்த 10,000 க்கும் மேற்பட்டவர்களை அச்சுறுத்தும் நோக்கில் செய்யப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
ஒரு எக்ஸ் தளப் பதிவையிட்டு ,இவ்விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை பற்றி கவலைகளை எழுப்பிய சுமந்திரன் குறித்த அகதியின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் மற்றும் அனுமதியையும் சுட்டிக்காட்னார்.
இருப்பினும், தடுத்து வைத்தல் என்பது அரசாங்கக் கொள்கை அல்ல, மாறாக நாட்டின் மீதமுள்ள பழைய சட்டங்களின் தானியங்கி பயன்பாடு என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தினார். கடந்த காலங்களில் அகதிகளுக்கு உதவ முயற்சிகள் இருந்தபோதிலும், "சட்டப்பூர்வமாக்கப்படாத துறைமுகங்கள்" வழியாக முதலில் குடியேறிய நபர்கள் இன்னும் காலாவதியான சட்ட விதிகளுக்கு உட்பட்டுள்ளனர் என்று அவர் விளக்கினார்.
"நாங்கள் 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அகதி முகாம்களுக்குச் சென்று, 2008 ஆம் ஆண்டு அந்த முகாம்களில் உள்ள 28,500 இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தினோம்," என்று ரத்நாயக்க கூறினார். "அங்கீகரிக்கப்படாத வழிகளில் வெளியேறியவர்களுக்கு இந்தச் சட்டம் தானாகவே பயன்படுத்தப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் அதில் பணியாற்றியிருந்தால், போருக்குப் பிறகு இந்தச் சட்டத்தை மாற்றியிருக்கலாம்."
கொள்கையை திருத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் பேசியதாகவும், அவர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago