Editorial / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா
உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார்.
இதற்கமைய சாதாரண தபால் கட்டணம் 70 ரூபாயாகவும், பதிவுத் தபால் கட்டணம் 130 ரூபாயாகவும் ஆரம்ப நிறை 20 கிராமில் இருந்து 30 கிராம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய நிர்ணயிக்கப்பட்ட தபால் அட்டைக்கான விலை 40 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 250 கிராம் உள்நாட்டுச் சாதாரண பொதிகள் சேவைக்கான ஆரம்ப கட்டணம் 150 ரூபாயாகவும், விரைவு 'கூரியர்' சேவைக்கான திருத்தப்படு குறைந்தபட்ச கட்டணம் 200 ரூபாயாகும் 30 கிராம் வரையான அச்சிடப்பட்ட பக்கெட்டுகள் அல்லது கடிதங்களுக்கான கட்டணம் 45 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகரிக்கப்படும் சாதாரண கடிதங்கள் மற்றும் பொதிகளுக்கான கட்டணங்கள் ஒவ்வொரு 10 கிராமுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago