2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆட்சிபீடம் குறித்து மஹிந்தவுக்கு சந்தேகம்

Editorial   / 2019 மார்ச் 11 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்  

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு, தாமும் விரும்புவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர எம்.பி., சிலரின் செயற்பாடுகளால் தமது கட்சி ஆட்சிபீடமேறுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து அமைக்கவுள்ள மாபெரும் கூட்டணியில், சுதந்திரக் கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகளே, பொதுஜன பெரமுனவுக்கு செல்லும் என்றார்.  

அம்பலாந்தோட்டையில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  

குறித்த இரண்டு கட்சிகளை ஒன்றிணைக்கும் தேவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் காணப்படுவதாகவும், எனினும், இரு கட்சிகளும் ஒன்றிணையக் கூடாதென சிலர் நினைக்கின்றனர் என்றார்.   

“இரு கட்சிகளும் இணைந்து பொதுவான எதிரணியாக வேண்டுமென்பதில் தாம் உறுதியோடு இருப்பதாகவும், எனினும் ஒரு கட்சியின் வாலாக மற்றொரு கட்சி இருக்கக் கூடாது” என்றார்.   

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கண்டியில் நடத்தப்பட்ட “பொறுத்தது போதும்” பேரணியில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் எனத் தெரிவித்த அவர், இரண்டு கட்சிகளுக்குமிடையிலும் பொதுவான​​​தோர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியதன் பின்னர், இனிவரும் எதிர்ப்புப் பேரணிகளில் கலந்துகொள்வோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.  

நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதிமுறைமை இந்நாட்டுக்கு அவசியமானதெனத் தெரிவித்த அவர், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டால், அதற்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X