Simrith / 2025 மார்ச் 16 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
திவுலன்கடவல பகுதியில் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஆறு சந்தேக நபர்களை மெதிரிகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நாளை (17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மார்ச் 14 ஆம் திகதி இரவு திவுலங்கடவல ஜனாதிபதி கல்லூரி விளையாட்டு மைதானத்தில், விளம்பரப்படுத்தப்பட்ட இரண்டு பாடகர்கள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு வரத் தவறியதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த பார்வையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், இசைக்கருவிகள் மற்றும் இருக்கை ஏற்பாடுகள் உட்பட சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.
சம்பவத்தில் தொடர்புடைய மீதமுள்ள சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய ஐந்து சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026