Freelancer / 2024 நவம்பர் 24 , பி.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபையினால், மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இந்த வருடத்திற்குள் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் இந்தத் கருத்தை வெளியிட்டுள்ளார்
கடந்த செப்டம்பர் மாதம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு, மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையொன்று இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை, மேலும் கால அவகாசம் கோரியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான பின்னணியில், மின் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளக் குறைந்தது 6 வாரங்களாவது தேவைப்படும் எனவும், அதற்கமைய இந்த வருடத்துக்குள் மின்கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். (a)
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago