2025 ஜூலை 09, புதன்கிழமை

இலங்கையில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய இளைஞர்கள்

Editorial   / 2018 நவம்பர் 28 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய இளைஞர்கள் சிலர் இலங்கையில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் ஒப்பந்த நிறுவனம் ஒன்றினால் இலங்கைக்கு அழைத்த வரப்பட்ட 30  இளைஞர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொழில்பெற்றுத் தருவதாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட குறித்த இளைஞர்களுக்கு தொழில் வழங்கப்பட்ட போதிலும், கடந்த 2 மாதங்களாக அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவர்களுக்கு உணவு, குடிநீர் வசதி கூட வ​ழங்காமல் கலேவல- கட்டுபொத பிரதேச வீடொன்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே வெகு விரைவில் தம்மை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அனுப்புமாறு குறித்த இந்திய இளைஞர்கள் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .