2025 ஜூலை 09, புதன்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு"  என்ற தேசிய  கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின் பிரகாரம், வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக,  நாடு முழுவதும் இருந்து  அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல்களை  சேகரிக்க, தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஆண்டு அல்லது இந்த ஆண்டு,  அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட  ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட வெகுசன ஊடகவியலாளர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்படவுள்ளன.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை,  தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் www.media.gov.lk  என்ற இணையத்தளம் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ளவோ  அல்லது அமைச்சுக்கு வருகை தருவதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.

பூர்த்தி செய்த படிவத்தை, மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் 'பணிப்பாளர் (ஊடகம்), தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, இல.163, ' எதிசிதி மெதுர ', கிருலப்பனை வீதி, பொல்ஹேன்கொட, கொழும்பு - 05. ' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலதிக விபரங்களை,  011-2513645  என்ற தொலைபேசி  இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெஅறிந்துக்கொள்ள முடியுமென, அமைச்சின் ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .