Simrith / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டு எதிர்க்கட்சி கூட்டணியான "மக ஜன ஹந்த" (மக்களின் குரல்) தொடங்குவதை அறிவிக்கும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கலந்து கொள்ளவில்லை.
பங்கேற்கும் எதிர்க்கட்சிகளின் பட்டியலில் SJB இடம்பெற்றிருந்தாலும், அக்கட்சியின் பிரதிநிதிகள் யாரும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
முன்மொழியப்பட்ட எதிர்க்கட்சி பேரணியில் தமது கட்சி பங்கேற்காது என்று எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கர் நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP), பிவிதுரு ஹெல உறுமய (PHU), மகஜன எக்சத் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி (NFF), ஸ்ரீலங்கா மகஜன பெரமுன மற்றும் நவ ஜனதா கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் புதிய கூட்டணியே “மஹா ஜன ஹந்த” ஆகும்.
ஜனநாயக விரோத நடவடிக்கைகள், தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றைத் தங்கள் முக்கிய கவலைகளாகக் கூறி, நவம்பர் 21 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக கூட்டுப் பொதுப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் ஊடகங்களுக்கு உரையாற்றினர்.
22 minute ago
25 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
25 minute ago
28 minute ago