2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் குறித்த முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை வந்தடைந்துள்ள  டீசல் கப்பலுக்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் கப்பலிலிருந்து பெட்ரோலை தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தலா 60,000 மெட்ரிக்தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள லங்கா நிலக்கரி நிறுவனம், முதலாவது கப்பல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X