2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

Freelancer   / 2025 ஒக்டோபர் 23 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 20 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்  பட்டுள்ளனர்.

இவர்கள் 25, 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்களில் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர் எனவும் அவரிடமிருந்து ஒரு வாழும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை யாழ். பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X