Freelancer / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துனெத்திக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (07) கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது நாட்டின் கைத்தொழில் துறை கொண்டுள்ள ஆற்றல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக கைத்தொழில் துறை வழங்கி வரும் பங்களிப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து அமைச்சர் இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.
இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தச் செயற்பாடுகளில், கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது வெகுவாகப் பாராட்டினர்.
அத்துடன், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் நிலவும் தடைகளை அகற்றுதல், ஏற்றுமதிச் செயல்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பொருத்தமான சூழலை உருவாக்குவது குறித்தும் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இணையாக உள்ளூர் கைத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள் மற்றும் நிதி வசதிகள் தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. (a)

17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago