2025 ஜூன் 11, புதன்கிழமை

ஐ.நா அலுவலகத்துக்கு கடும் பாதுகாப்பு

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு முன்பாக கடும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மேலதிக பாதுகாப்புக்காக, விசேட அதிரடிப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு, புதன்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்தார்.

அவருடைய வருகையை எதிர்த்தும், சர்வதேச விசாரணைக்கான அதிகாரங்களை பிரயோகிக்க வேண்டாமென வலியுறுத்தியும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கு நீதிக்கோரி ஐக்கிய சமாதான முன்னணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இந்நிலையில், அவரது வருகையையொட்டி கொழும்பில் உள்ள பிரதான வீதிகளில் ஐ.நா கொடியும், தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10