Editorial / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க) ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி என்கிற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு (வயது 65) மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago