Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை சென்ற வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என மதுரை ஆதீனம் மனு அளித்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை சென்றார். அவர் நேற்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். முன்னதாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற அமித் ஷாவை மதுரை ஆதீனம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்று புத்தகம் மற்றும் மனு வழங்கப்பட்டது.
பின்னர் மதுரை ஆதீன ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறுகையில்,
பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும்போதும் அவரை சந்தித்து பேசினேன். இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். அவரை கோயில் முன்பு வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அமித் ஷாவிடம் மனு ஒன்றை அளித்தேன். அதில் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும், கச்சதீவை மீட்டு இந்தியாவுடன் சேர்க்க வேண்டும். இந்திய மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்கவும், மீனவர்கள் பிரச்சினையை தீர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார். (a)
10 minute ago
25 minute ago
40 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
40 minute ago
58 minute ago