Editorial / 2026 ஜனவரி 17 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான தினேஷ் நிஷாந்த குமார அல்லது கம்பஹா பாபா எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷார சேவ்வந்தியுடன் இருந்தபோது அவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு தீவுக்கு அழைத்து வரப்பட்டார். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேக நபர் பேலியகொட பொலிஸாரால் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டார்.
களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவரது குழுவினரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026