Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
போக்குவரத்து விதிகளை மீறி வீதியை கடப்பவர்களின் அடையாள அட்டை மற்றும் பிற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு கணினிமயமாக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டைக்கு வரும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தால் நேற்று நடத்தப்பட்டது.
இதில், போக்குவரத்து விதிகளின்படி, பாதசாரிகள் வீதியை கடக்கிறார்களா என கடுமையாக சோதனை செய்தனர்.
பல பாதசாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி, சிவப்பு விளக்குகள் எரியும் போது வீதியைக் கடப்பதைக் காண முடிந்தது, மேலும் அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் வீதியைக் கடப்பது குறித்து பொலிஸார் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தனர் .
போக்குவரத்து விதிகளை மீறி வீதியை கடப்பவர்களின் அடையாள அட்டை மற்றும் பிற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு கணினிமயமாக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். (R)
10 minute ago
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
51 minute ago
3 hours ago