J.A. George / 2025 ஜூன் 12 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி திசாநாயக்க, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கடிதம் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பல முக்கிய பதவிகள் வரும் நாட்களில் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம், சிறைச்சாலை கண்காணிப்பாளர் பதவிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் இந்தமாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போதுசிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவரது பதவியில் நீதியமைச்சின் மேலதிக செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago