J.A. George / 2021 மார்ச் 04 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹா சிவராத்திரி விரதத்தினை அனுஷ்டிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறு இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில், பிரதமரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சிவராத்திரி விரத நிகழ்வுகளை இந்து ஆலயங்களில் சிறப்பாக நடத்த உதவிகளை வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மஹா சிவராத்திரி விரதத்தை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களுக்கு பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
19 minute ago
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
2 hours ago