Freelancer / 2021 நவம்பர் 08 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் பொருட்டு, மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைப் பிரிவுகள், 35 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளன.
இந்தக் குழுவில் 35 கப்பல்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 200 பேர் இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
வெள்ள அபாயத்துக்கு முன்னாயத்தமாக, மேற்கு கடற்படை கட்டளை பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று அனர்த்த நிவாரண குழுக்களை நிலைநிறுத்தியுள்ளது.
அதேவேளை, உடனடி நிவாரணத்திற்காக 24 மேலதிக நிவாரண குழுக்கள் மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவில் நிறுத்தப்பட்டுள்ளன.
உடுகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உடலமட்ட பிரதேசத்திலும் தென் கடற்படைக் கட்டளைப் பிரிவின் நிவாரணக் குழுவொன்று நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, தேவையான போது நிவாரண குழுக்களை நிவாரண குழுக்களை அனுப்ப கடற்படை எப்போதும் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
3 hours ago