Editorial / 2019 ஜூலை 24 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினரைப் பலப்படுத்துவதற்காக, வெளிநாட்டு பிரஜையொருவரின் கீ்ழ், அதிகாரிகளுக்கு மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பல நாடுகளின் சிறைச்சாலைகள் தொடர்பில் அனுபமுள்ள சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகயில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் தகவல்கள் ஊடாக சட்டவிரோதச் செயற்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் புலனாய்வு பிரிவினர் செய்ய வேண்டடியவை எவை என்பது தொடர்பில் இவர் பயிற்சிகளை வழங்கவுள்ளார்.
இதனுடன் தொடர்புடையதான, திட்டங்கள் 2 அங்குணகொலபெலஸ்ஸ, பூஸா ஆகிய சிறைச்சாலைகளை மய்யப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இந்தப் பயிற்சிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதென்றும் சிறைச்சாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 minute ago
31 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
46 minute ago
2 hours ago