Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஓகஸ்ட் 31 , பி.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் ஜனாஸாவை மாவனெல்ல ஹெம்மாத்தகமவுக்கு எடுத்துச்செல்வதற்கு உதவியதாக கூறப்படும் இருவரை, விரைவில் கைதுசெய்யவுள்ளதாக, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட பொலிஸ் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராண்ட் பாஸ் மற்றும் சேதவத்தை பகுதியைச் சேர்ந்த இருவரே, இவ்வாறு உதவியிருப்பதாகவும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்களான அவ்விருவரும், பலமுறை அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இன்னும் சிலர் தொடர்பில் விசாரணைகளை நடத்தப்பட்டுவருவதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கோடீஸ்வர இளம் வர்த்தகரான முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக கொழும்பிலிருந்து மாவனெல்ல, ஹெம்மாத்தகம பகுதி வரையுள்ள சீ.சீ.டிவி கமெராக்களை சோதனை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர். அதற்கு முன்னதாக கொழும்பு, பம்பலப்பிட்டிய சனநெரிசல் மிக்க இடங்களிலுள்ள சீ.சீ.டிவி கமெராக்களில் பதிவாக காட்சிகளை சோதனை செய்திருந்தனர்.
வியாபாரியின் தந்தையிடம் கப்பம் கோரி, கேகாலையிலிருந்து கிடைத்த அலைபேசி அழைப்பினை மேற்கொண்ட நபரை துல்லியமாக அடையாளம் காணுவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
குறித்த வர்த்தகர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில், பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டே படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம், ஹெம்மாத்தகம பிரதேசத்திலிருந்து, 24 ஆம் திகதி புதன்கிழமை (24) இரவு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வர்த்தகர் சுலைமானின் மரணம் தொடர்பில், பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும், வர்த்தகர்கள் ஐவர், இந்நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில், கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால், தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
20 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago