2025 மே 22, வியாழக்கிழமை

டலஸ் அழகப்பெரும - ஜூலி சங் இடையே சந்திப்பு

Simrith   / 2025 மே 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமவும், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்கும் புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் ஒரு சுமுகமான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல், அமெரிக்காவின் புதிய நிர்வாகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"இலங்கை, அதன் கலாச்சாரம் மற்றும் மக்களுடன் ஜூலி சங் தொடர்ந்து கொண்டுள்ள உணர்ச்சிபூர்வமான ஈடுபாட்டிற்கு நன்றி" என்று டலஸ் மேலும் கூறினார்.

அமெரிக்க தூதர் ஜூலி சங்குடன் சேர்ந்து, அமெரிக்க தூதரகத்தின் அரசியல் செயலாளர் சாக் லோன்ஸையும் டலஸ் அழகப்பெரும சந்தித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X