Janu / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
"நியேலினி" உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் "Song of Resilience" என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோலிவுட் கலைஞர் பிரகாஷ் ராஜ் ஞாயிற்றுக்கிழமை (07) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயம் தொடர்பாக கலந்துரையாடும் "நியேலினி" உலகளாவிய மாநாடு, உலகின் 102 நாடுகளைச் சேர்ந்த 500 விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பில் கண்டியில் உள்ள பொல்கொல்ல கூட்டுறவு கலையரங்கத்தில் திங்கட்கிழமை (08) மற்றும் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற உள்ளது.
பிரகாஷ் ராஜ் ஞாயிற்றுக்கிழமை (07) மதியம் இந்தியாவின் பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1167 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்
அவரை வரவேற்பதற்காக பத்திரிகையாளர் தரிது உடுவரகெதர, திரைப்பட இயக்குனர் சமிந்த ஜெயசூரிய உட்பட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
டி.கே.ஜி. கபில

11 minute ago
16 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
31 minute ago
39 minute ago