Mayu / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நமது வாழ்வில் பொறுமையும் நம்பிக்கையும் மிக அவசியமான இந்த காலகட்டத்தில் மலரும் தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டு, மக்களின் இடர்கள் மற்றும் துயரங்களை நீக்கி, புதிய நம்பிக்கையை வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்-சிங்கள புத்தாண்டு நம் அனைவரின் மாபெரும் கலாசார பெருவிழாவாகும் என்றும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று, சமூக மற்றும் கலாசார மரபுகளை தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான நிகழ்வாகவும் இது திகழ்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நம் நல்லெண்ணங்களையும் இலக்குகளையும் அடைவதற்கான ஒரு புதிய தொடக்கமாக அமைகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, 2026 ஆம் ஆண்டின் பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு, நாட்டின் அனைத்து மக்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டி தனது இதயம் கனிந்த வாழ்த்துகளை ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
26 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago