Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 15 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தலில் சின்னம், இதயம், யானை என்ற இரண்டும் இல்லை என்றால், அன்னப்பறவையை ஏற்றுக்கொள்வோமெனத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, தேர்தலை பதிவு செய்யப்பட்ட கூட்டணியிலேயே களமிறங்குவோமெனவும் தெரிவித்துள்ளது.
கூட்டணி தலைவராக சஜித் பிரேமதாசவும், கூட்டணி தலைமைக்குழுவில் ஐ.தே.க பிரதிநிதிகளுடன் கூட்டணி பங்காளி கட்சி தலைவர்களும் இடம்பெறுவோம். கூட்டணியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டாரவும், வேட்பாளர் தெரிவுக்குழுவின் தலைவராக சஜித் பிரேமதாசவும் செயற்படுவார்கள். இவை எங்கள் இந்த குறைந்தபட்ச நிலைப்பாடுகள். இவற்றை ஐதேக செயற்குழு ஏற்கும் என தான் நம்புவதாகவும் கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ஐக்கிய தேசிய கட்சியே கூட்டணின் பிரதான கட்சி. அந்த கட்சி பிளவுபடக்கூடாது. இதில் நாம் மிகவும் அக்கறை கொண்டு இருக்கிறோம். உண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெரும்பான்மை முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், இன்றைய உள்ளூராட்சி மன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள், பெரும்பான்மை கடைநிலை உறுப்பினர்கள் சஜித் அணியுடன்தான் இருக்கின்றார்கள். நாங்களும் அவர்களுடன் இருக்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடக்கூடாது என்ற சஜித் தலைமையிலான எமது ஒட்டுமொத்த நல்லெண்ணத்தை எவரும் எமது பலவீனமாக கருதி எம்முடன் விளையாட முயலக்கூடாது. அப்படியான விளையாட்டு முயற்சியில் எவரும் ஈடுபட்டால், சஜித் பிரேமதாச தலைமையிலான எமது கூட்டணியின் இதயம் சின்னத்தில் நாம் நிச்சயம் களமிறங்குவோம். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து விட்டன.
பதிவு செய்யப்பட்ட கூட்டணி, கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார, வேட்பாளர் தெரிவுக்குழு தலைவர் சஜித் பிரேமதாச, என்பவை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானங்கள்தான்.
இன்று இவற்றில் இருந்து பின்வாங்குவது யார் என மக்களுக்கு தெரியும். எங்களுடன் முரண்படுகின்றவர்கள் யார் என மக்களுக்கு தெரியும். ஐதேக பிளவுப்படுமானால், அதற்கான முழு பொறுப்பை எம்முடன் முரண்படுகின்றவர்கள்தான் ஏற்க வேண்டும். இப்படி செய்து ஆளும் அரசாங்கத்தை மகிழ்ச்சியடைய செய்து, அரசாங்கத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்து விட வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை கேட்டுக்கொள்கிறேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
8 hours ago