Editorial / 2025 நவம்பர் 26 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓடும் விமானத்தில் இருந்து 4 இலட்சத்து 93 ஆயிரத்து 855 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை திருடிய இரண்டு சீன பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, பேராதனையில் உள்ள விஹாரையில் வசிக்கும் ஆசிரியரான தீகல்ல மஹிந்த தேரர். எதிஹாட் ஏர்வேஸ் EY-392 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (25) காலை 10.05 மணிக்கு வந்தடைந்தார்.
விமானம் கட்டுநாயக்க மீது பறந்து கொண்டிருந்தபோது, அவர் ஓய்வெடுக்க கழிப்பறைக்குச் சென்றிருந்தார். அதே விமானத்தில் இருந்த இரண்டு சீன பிரஜைகள் அவரது இருக்கையை நெருங்கி, வைக்கப்பட்டிருந்த அவரது சூட்கேஸில் கையை புகுத்தி ஏதோ தேடியுள்ளனர்
அந்த நேரத்தில், துறவிகள் வந்தவுடன் சீனர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர், அந்த நேரத்தில் துறவிகள் மேலும் விசாரிக்கவில்லை. அதன் பின்னர் தனது பயணப் பொதியை சோதித்தபோது பணம் திருடப்பட்டது கண்டறியப்பட்டது.
இது தொடர்பில், கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு தேரர் கொண்டுவந்தார். அதன் பின்னர், சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
1 hours ago