Editorial / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு வீட்டில் தனது பேத்திக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்த பாட்டியின் தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் ஒருவர் அபகரித்துச் சென்றுள்ள சம்பவம், மொனராகலை, சிரிவிஜயபுராவில் இடம்பெற்றுள்ளது. சென்றுள்ளார்.
தனது குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை அணுகிய இரண்டு இளைஞர்களில் ஒருவர், அவரது மொபைல் போனில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, அவரைத் தெரியுமா என்று கேட்டனர்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த இளைஞர் உடனடியாக அவரது கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துக்கொண்டு, தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
இந்த தங்க நகையின் மதிப்பு சுமார் 2 இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் என அறியமுடிகின்றது.
சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்திய பொலிஸார் , அந்த இளைஞன் பிபில பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
19 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
33 minute ago
42 minute ago