2025 ஜூன் 26, வியாழக்கிழமை

போதைப்பொருள் விற்பனை: பெண் கைது

Freelancer   / 2022 டிசெம்பர் 04 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான் 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயது பெண்ணொருவர் நேற்று  (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் 08 கிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 1 கிராம் 400 மில்லி கிராம் என்பன கைப்பற்றப்பட்டுளன.

கைது செய்யப்பட்ட பெண்ணை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .