2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

‘மாஸ்க் இன்றேல் பி.சி.ஆர் பாயும்’

Editorial   / 2021 ஜனவரி 06 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகக் கவசம் (மாஸ்க்) அணியாவிட்டாலோ, சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டாலோ, அவ்வாறானவர்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்துள்ள பொலிஸார், அவ்வாறானவர்களுக்குக் கட்டாயமாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

அவ்வாறு, முகக்கவசம் அணியாத 74 பேர், கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், முகக்கவசம் அணியாத 2,172 பேர், ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நேற்று (04) வரையிலுமான காலப்பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடருமென அறிவித்துள்ள அவர், இச்செயற்பாடுகள் நேற்று (5) முதல் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .