Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர், வவுனியா நீதிமன்றத்தால் இன்று (18) பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பேரையும், கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு நேற்று முன்தினம் (16) ஆலோசனை வழங்கியிருந்தார்.
அத்துடன், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன, தமிழ்மிரருக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில் அவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago