2026 மார்ச் 18, புதன்கிழமை

யாழில் தேரர் சடலமாக மீட்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் உள்ள  ஆலயங்களை பார்ப்பதற்காக வருகை தந்த தேரர் ஒருவர் யாழில் உள்ள விகாரையில் உயிரிழந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பதுளை வீதி, பசறையைச் சேர்ந்த வனபதுளே சரணதர தேரர் (வயது 72) என்பவராவார்.

மேற்படி தேரர் யாழில் உள்ள ஆலயங்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு விகாரையில் தங்கி இருந்த நிலையில், நேற்று காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X