R.Maheshwary / 2021 மார்ச் 29 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், யாழ். மாவட்டத்தில் மிக வேகமாக அதிகரித்து வருவதால், யாழ். கல்வி வலையத்திலுள்ள சகல பாடசாலைகளும் ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இன்று (29) முதல் ஒரு வாரத்துக்கு, பாடசாலைகள் மூடப்படும். அதுதொடர்பிலான தீர்மானம் நேற்று (28) மாலை எட்டப்பட்டுள்ளது .
.வடமாகாண ஆளுநர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் முதலாம் தரத்தைத் தவிர, ஏனைய அனைத்துத் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (29) ஆரம்பமாகுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கலாம் என அறிவுறுத்தி, கல்வி அமைச்சின் செயலாளரால், ஒழுங்கு விதிகள் அடங்கிய சுற்றறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
21 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
35 minute ago
45 minute ago