Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆறு மாவட்டங்களில் பெரும்போக செய்கையில் ஈடுபடுவோருக்கு தேவையான யூரியாவை விரைவாக பெற்றுக்கொடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சினால் இன்று (20) விடுக்கப்பட்ட அறிக்கையில், அமைச்சரால் மேற்குறிப்பிட்ட விடயம் குறித்து அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் விவசாய நிலையங்களுக்கு யூரியாவை வழங்கி, உரத்தை இலகுவாக கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்போகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் யூரியா உர மூடை, 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.
தேயிலை மற்றும் சோளம் செய்கையாளர்களுக்கு 50 கிலோகிராம் யூரியா உர மூடையை 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
25 minute ago
37 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
56 minute ago
1 hours ago