2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

ராஜிதவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாகி இருந்த முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (29) ஆஜரானார்.

அவரை, அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, வௌ்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வேண்டுகோளின் மேல் நீதிமன்றத்தால் இன்று (29) காலை  விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்த குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளார்.

கிரிந்த மீன்வள துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இருநூறு மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X