2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வசந்த கரன்னாகொடவிடம் CID 6 மணிநேரம் விசாரணை

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கடற்படைத்  தளபதி ரியல் அத்மிரல்  வசந்த கரன்னாகொட, விசாரணைகளை நிறைவுச்செய்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து  வெளியேறியுள்ளார்.

வசந்த கரன்னாகொடவிடம்  இன்றைய தினம் 6 மணிநேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவரிடம், 8 மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

11 இளைஞர்களை கடத்திச் சென்று, அவர்களை காணாமல் ஆக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே, வசந்த கரன்னாகொடவிடம் இரண்டாவது நாளாகவும்  இன்று விசாரணகள்  முன்னெடுக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .