Editorial / 2026 மார்ச் 08 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட உணவகம் ஒன்றுக்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த உணவகத்திற்கு 70,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனைத் தற்காலிகமாக மூடவும் (சீல் வைக்கவும்) நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரனின் வழிகாட்டலில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன், ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகங்களைச் சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையின் போது, குறித்த உணவகம் பொதுச் சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை கண்டறியப்பட்டது. குறிப்பாக:
உணவகத்தின் கழிவுநீர் முறையான வடிகால் வசதியின்றி திறந்த வெளியில் வெளியேற்றப்பட்டமை.
உணவு தயாரிப்பதற்காகக் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் கடலை ஆகியவற்றில் பெருமளவிலான வண்டுகள் காணப்பட்டமை.
இது தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தவேந்திரராஜாவினால் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிவான், பின்வரும் கட்டளைகளைப் பிறப்பித்தார்:
நீதிமன்ற உத்தரவின் பேரில், மனிதப் பாவனைக்கு உதவாத அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் அதிகாரிகளால் அழிக்கப்பட்டன. பொதுமக்களின் ஆரோக்கியத்தில் அக்கறையின்றி செயற்படும் உணவகங்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026