2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘வரவுசெலவுத் திட்டத்தை எங்களால் தோற்கடிக்க முடியாது’

Editorial   / 2019 மார்ச் 26 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

வரவு-​செலவுத் திட்டம் (பாதீடு) மீதான வாக்கெடுப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதற்கு ஆதரவாக வாக்களிக்குமெனத் தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, அதனால், இம்முறை வரவு-செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சியினால் தோற்கடிக்க முடியாது என்றார்.

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று (25)​ நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போ​தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உ​ரையாற்றுகையில், வரவு-செலவுத் திட்டத்துக்கான கௌரவத்தையே அரசாங்கம் இல்லாது செய்துள்ளதோடு, பண்டாரநாயக்கவின் குடும்பத்தை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிளவுப்படுத்தியதுபோல, ராஜபக்ஷர்களின் குடும்பத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், பிளவுப்படுத்த முடியாதெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வரவு-செலவுத்திட்டத்தில் வெற்றிபெறுவதற்காக, ஐ.தே.க அரசாங்கம் இலஞ்சம் வழங்கியுள்ளதாக, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்ததோடு, ஏப்ரல் ஐந்தாம் திகதி, வரவு-செலவுத் திட்டம் நி​றைவேற்றப்படும் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X