Editorial / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் உடனடியாக சரணடைவதாக வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க, தனது வழக்கறிஞர் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (15) அறிவித்தார்.
வன்னிநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு, நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வன்னிநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் பைஸ் முஸ்தபா இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இந்த விவகாரம் தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், நடந்து வரும் குற்றவியல் விசாரணையில் தலையிடாது என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026