2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் பிக்கு உயிரிழப்பு

Gavitha   / 2016 மார்ச் 28 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னிபிட்டியவில் இன்று திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தின் போது, பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வானொன்று, வீதியை கடக்க முயற்சித்த பிக்குவை மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தலங்கம-மாலபே பகுதியைச் சேர்ந்த விஹாரையொன்றின் பிக்கு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எனினும் இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பிச்சென்றுள்ளதாகவும் இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .