2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘கோப்’ குழுவின் மற்றுமோர் அறிக்கை இவ்வாரம் சமர்ப்பிப்பு?

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) மற்றுமொரு அறிக்கை, நாடாளுமன்றத்தில் இவ்வாரத்துக்குள் சமர்ப்பிப்பதற்கு அக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது. 

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பெரும் பங்காற்றுகின்ற 15 நிறுவனங்கள் தொடர்பிலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது என்று, அக்குழுவின் தலைவரும் ஜே.வி.பியின் எம்.பியுமான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

  வீதி அபிவிருத்தி அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை, ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம், இலங்கை கிரிக்கெட் சபை, ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் அடங்கிய அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளது.  

இந்த அறிக்கை தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரியவுடன், விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றது என்றும் அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X