2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘வற்’ திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதி சேர் வரி (வற்) திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வரி திருத்தச் சட்டமூலத்தின் 4, 13, 17 மற்றும் 18ஆவது உறுப்புரைகள்,

அரசியலமைப்பின் 3, 4, மற்றும் 12 (1), 12 (2), 14 (1) (2) உறுப்புரைகளுக்கு எதிராக உள்ளன என்று தெரிவித்து, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பிலவினால், நேற்று முற்பகல், இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த மனு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் வரையில், வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படாது என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .